Saturday, 10 October 2015

ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா?

Dr.Jerome -FI

இதற்கு நேரடியாக ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறேன், கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான்.
இந்தக் கட்டுரை இத்துடன் முடிந்தது.

மேலும் தகவலுக்கு மேற்கொண்டு படியுங்கள்.
ஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா என்பதைப் பற்றி விளக்குவதற்காக ஒரு கட்டுரை எழுதுவதற்கு எனக்கு விருப்பமில்லை என்றாலும், அநேகம் பேர் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டேயிருப்பதால் இதை எழுதுகிறேன்.
இரண்டும் ஒன்றுதான் என்றால்,
ஏன் வேறுவேறு பெயர்கள்?
ஏன் வேறுவேறு படிப்புகள்?
ஏன் வேறுவேறு கல்லூரிகள்? (சித்த மருத்துவ படிப்பு- B.S.M.S(Bachelor of Siddha Medicine and Surgery
ஆயுர்வேத படிப்பு – B.A.M.S(Bachelor of Ayurvedha Medicine and Surgery)
இவை நியாயமான கேள்விகள்தான்.
ஆயுர்வேதத்திற்கும், சித்த மருத்துவத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே மொழிதான்.
சித்த மருத்துவத்தின் மூல நூல்கள் தமிழில் எழுதப்பட்டன. ஆயுர்வேதத்தின் மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன.
aayurvedhavum siddhaavum1
சித்த மருத்துவம் தமிழர்களின் மருத்துவம், அதே மருத்துவத்தைத்தான் ஆயுர்வேதம் என்ற பெயரில் ஆரியர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர்.
சித்த மருத்துவத்திலிருந்தே ஆயுர்வேதம் வந்தது எனவும், ஆயுர்வேதத்திலிருந்தே சித்த மருத்துவம் வந்தது எனவும் மாறிமாறி கூறிக் கொள்கின்றனர். இதனை வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

நான் இங்கே இதை எழுதுவதற்குக் காரணம், நோயாளிகளுக்கு ஒரு தெளிவு வரவேண்டும் என்பதற்காகத்தானே தவிர ஆயுர்வேதம், சித்தமருத்துவம் பற்றிய தொன்மங்களை ஆராய்வதற்கல்ல. வேண்டுமானால் இன்னும் சற்று விளக்கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடிகள் என சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோரைக் கூறலாம். இதில் சரகரின் காலம் கிறிஸ்துவுக்குப் பிறகு 2 ஆம் நூற்றாண்டின்ஆரம்ப காலம். சுஸ்ருதர் காலம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு.

சரி, குறைந்தபட்சம் இவர்களின் காலம் இது என தெரிகிறது.
சித்த மருத்துவம் இவர்களுக்கு முந்தியது என கூறவேண்டுமானால் சித்தர்களின் காலம் தெளிவாகத் தெரியவேண்டுமல்லவா.

அறுதியிட்டுக் கூறும்படியாக இன்னும் சித்தர்களின் காலம் கணிக்கப்படவில்லை.

இதை செய்யவேண்டியது மருத்துவர்களின் பணி அல்ல, தமிழ் வரலாற்றாசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்களின் பணி, தமிழ் பல்கலைக்கழகம், தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தொல்லியல் துறை, மத்திய தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனம், உலக தமிழ் ஆராய்ச்சிநிறுவனம் போன்ற நிறுவனங்களும் ”தமிழ் தமிழ்” என்று பேசுவபவர்களும் தான் இதற்கு பொறுப்பு.

ஆரியர்கள் இங்கே வந்தபோது அவர்களுடன் எந்த மருத்துவமுறையையும் கொண்டுவரவில்லை எனவும், நான்கு வேதங்களான ரிக், யசூர், சாமம், அதர்வணம் எனும் வேதங்களில் கடைசி வேதமான அதர்வண வேதத்தின் ஒரு கிளையாகவே மருத்துவம் கூறப்பட்டது எனவும், அது அவர்கள் இங்கே வந்த பிறகு இங்கிருந்த தமிழர்களிடத்திருந்தே அந்த மருத்துவ அறிவைப் பெற்றனர் எனவும் கூறப்படுகிறது.

நோய் இயல் (Pathology):

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டுமே வாதம், பித்தம், கபம் எனும் அடிப்படையிலேயே நோய்களை வகைப்படுத்துகின்றன.

நோய் கணிப்பு(Diagnosis):

இரண்டுமே நாடி அடிப்படையில் நோய்களை கணிக்கின்றன.

மருந்து இயல் (Pharmacology):

இரண்டிலும் ஒரே மாதிரியான மருந்துச் சரக்குகளே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மருந்து செய் இயலில் ஆயுர்வேதத்தைவிட சித்த மருத்துவம் சற்று முன்னேறியுள்ளது.
aayurvedhavum siddhaavum2உதாரணத்திற்கு தங்கபற்பம் என்ற ஒரு மருந்தை இங்கே குறிப்பிடுகிறேன். இது தங்கத்திலிருந்து செய்யப்படுவது. இதே மருந்தைதான் ஆயுர்வேதத்தில் சொர்ண பஸ்மா என்று அழைக்கின்றனர்.

புவியியல் வேறுபாடு:

வட இந்தியாவில் அநேக வற்றாத ஜீவநதிகள் உள்ளன. கங்கை சமவெளி எப்போதுமே பசுமையாக இருக்கும். எனவே எப்போதும் மூலிகைகள் தயாராகக் கிடைத்துவிடும்.
ஆனால் தமிழக நதிகள் பருவநிலையைப் பொறுத்தே நீரோட்டம் கொண்டிருக்கும். எனவேதான் சித்த மருத்துவத்தில் மூலிகைகளைத் தாண்டி தாதுப்பொருட்களையும்(Minerals), உலோகங்களையும்(Metals), காரசாரங்களையும்(Salts), பாஷாணங்களையும்(Arsenic Compounds), உபரசங்களையும் (Secondary Minerals) மருந்தாகப் பயன்படுத்தும் அடுத்த நிலைக்கு சென்றனர். எனவேதான் சித்த மருத்துவர்களை பாஷாண வைத்தியர்கள் என்றே அழைக்கின்ற முறையும் வந்தது.
aayurvedhavum siddhaavum3


ஆக ஆயுர்வேதத்திலிருந்து சித்த மருத்துவம் வந்ததா, சித்த மருத்துவத்திலிருந்து ஆயுர்வேதம் வந்ததா என்பதை வரலாற்றாசிரியர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

நோயாளிகள் சிகிச்சை இந்திய முறை மருத்துவம் எடுத்துக் கொள்வோம் என முடிவெடுக்கும்போது அவர்களுக்கு சித்தாமருத்துவம் வேறு ஆயுர்வேதம் வேறா அல்லது இரண்டும் ஒன்றா என்ற கேள்வி வருகிறது. அதற்கான பதிலை மட்டும் இங்கே தருகிறேன், சித்தமருத்துவம் ஆயுர்வேதம் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஆனால் அதே நேரத்தில் இந்த தட்பவெப்ப சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது என்ற அறிவுரையையும் நான் தர கடமைப்பட்டுள்ளேன்.

யோகா: ஓகம்

aasthumaa3யோகா எனும் உடற்பயிற்சி ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. ஆனால் யோகா எனும் வார்த்தையே ஓக அல்லது ஒரு வடிவத்தை ஒக்க (போல) உடலை இருக்க வைப்பது என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது என கூறுவாரும் உளர்.
மரத்தைப் போல (ஒக்க) நிற்றல்
பாம்பை ஒக்க(போல)நிற்றல் (புஜங்காசனம்)
வில்லை ஒக்க(போல) இருத்தல் (தனுராசனம்)
பிணத்தை போல (ஒக்க) கிடத்தல் (சவாசனம்)
என ஒரு உருவத்தை ஒக்க உடலை வைப்பதே ஒக்க நிலை அல்லது ஓக நிலை என்று கூறப்பட்டது.
ஓக நிலை என்ற தமிழ் வார்த்தையே ‘யோகா’என ஆயுர்வேதத்தில் மருவியதாக கூறப்படுகிறது. பெயர் வேறுபடலாம், ஆனால் செய்யப்படும் உடற்பயிற்சியோ ஒன்றுதான்.

சித்த மருத்துவத்தின் சிறப்பு:
சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தை விட சிறப்பானது என்பதற்கு “வர்மம்” எனும் சிறப்பு சிகிச்சையை கொண்டு விளக்கலாம். வர்மம் எனும் ஒருதனி துறை சித்த மருத்துவத்தில் உள்ளது. இவை போன்ற சில நுணுக்கமான மருத்துவ மேம்பாடுகளை கொண்டு இந்திய மருத்துவ முறைகளுக்குள்ளே சித்த மருத்துவம் சிறந்தது என கூறிக்கொள்ளலாம்.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

Monday, 5 October 2015

இந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்யமுடியாது



Dr.Jerome -FITele medicine என்ற ஒன்று இப்போது காலத்தின் தேவையாகி வருகிறது. அதாவது காணொளி மருத்துவம். மருத்துவர் ஒரு இடத்தில் இருப்பார், நோயாளி வேறோர் இடத்தில் இருப்பார். காணொளி மூலமாக நோயாளியைப் பார்த்து அவர் கூறும் குறிகுணங்களைக் கேட்டு, அவரது ஆய்வக முடிவுகளைக் கேட்டு மருத்துவம் செய்வது.
இப்படி சித்த மருத்துவத்தை செய்யமுடியுமா? என யோசித்துப் பார்க்கிறேன்.
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறையை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் “நாடி”.
இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
sidda maruththuvam 1“நாடி” பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை.
“நாடி” என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.

பரிசோதனை முறைகள் (Diagnostic Methods):

சித்த மருத்துவத்தில் நோயினைக் கண்டறிவதற்கு அடிப்படையான பரிசோதனை முறைகள் எட்டு உள்ளன.
அவை,
  1. நாடி
  2. ஸ்பரிசம்
  3. நாக்கு
  4. நிறம்
  5. மொழி – நோயாளியின் பேச்சு
  6. விழி
  7. மலம்
  8. சிறுநீர்
இவற்றுள் முதன்மையானதும், முக்கியமானதும், அடிப்படையானதுமானது நாடி.

நாடி என்றால் என்ன?
siddha5இருதயம் இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் உந்தித் தள்ளுகிறது. இப்படி ஓடும் இரத்தத்தினால் இரத்தக் குழாய்களில் உணரப்படும் துடிப்பே நாடி.
பொதுவாக எந்த மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றாலும் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.
சாதாரணமாக அலோபதி மருத்துவர்கள் பார்க்கும் நாடி என்பது வெறும் எண்ணிக்கைதான். அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கவேண்டும். இதற்கு pulse rate என்று பெயர். இந்த எண்ணிக்கை கூடுவதை, குறைவதைக் கொண்டு உடலின் செயல்பாட்டை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
நாடி விகிதம் – pulse rate
உடல் வெப்பநிலை- Body Temperature
இரத்த அழுத்தம்- Blood Pressure
சுவாச விகிதம் (மூச்சுவிடும் எண்ணிக்கை) – respiratory rate
ஆகிய இந்த நான்கையும் மிக முக்கிய அறிகுறிகள் (Vital Signs) என அவர்கள் கருதுகின்றனர். இது மிகவும் சரியே.
ஆனால் இந்த நாடி கணிப்பு வேறு, சித்த மருத்துவமுறை நாடி கணிப்பு வேறு.
சித்த மருத்துவமுறையில் நாடிகளின் எண்ணிக்கை கவனிக்கப்படுவதில்லை. நோயாளியின் தேகநிலை கவனிக்கப்படுகிறது, அதாவது அவர்siddha2வாத தேகியா, பித்த தேகியா, கப தேகியா அல்லது கலப்பு தேகியா என்பதை கவனிக்கிறோம்.
நமது உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களின் செயல்பாட்டை பரிசோதிப்பதுதான் நாடி கணிப்பு.
ஏனென்றால் இந்த மூன்று இயக்கங்களில் ஏற்படும் பாதிப்புகளால்தான் நோய்கள் வருகின்றன.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”
என்ற குறளில் இதை காணலாம்.
வளி என்றால் வாயு அல்லது வாதம். வாதத்தை முதலாவதாகக் கொண்ட,
வளி – வாதம்
அழல் – பித்தம்
ஐயம் – கபம்
என்ற மூன்றும் அதிகரிப்பதாலும் குறைவதாலும் நோய் உண்டாகிறது. இதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை.

நாடி எப்படி பரிசோதிக்கப்படுகிறது?

வெறும் எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஒரு விரலை வைத்துக்கூட எண்ணிவிடலாம். ஆனால் வாத, பித்த, கபத்தை கணிப்பதற்கு மூன்று விரல்களை வைத்துப் பார்க்கிறோம்.
கட்டைவிரல் பக்கமாக மணிக்கட்டிற்கு 1 அங்குலம் மேலே ஆரை எலும்பின் (Radius Bone) மேல் செல்லும் இரத்தக்குழாயின் (radial Artery) மேல் விரல்களை வைத்து நாடி பார்க்கிறோம்.
ஆள்காட்டி விரலில் உணரப்படுவது – வாதம்
நடுவிரலில் உணரப்படுவது –பித்தம்
மோதிர விரலில் உணரப்படுவது – கபம்
இவை முறையே 1: ½ : ¼ என்ற விகிதத்தில் துடித்தால் நல்ல நிலையில் உடல் உள்ளது (Normal) எனலாம்.
இங்கு விரல்கள்தான் கணிக்கும் கருவிகள்.
(இவற்றை மின்னணு முறையில் பதிவு செய்ய முடியுமா என்ற பரிசோதனை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை விரைவுபடுத்த வேண்டியதும் அதற்கு நிதி ஒதுக்க வேண்டியதும் அரசின் கடமை. தமிழ் தமிழ் என பேசுபவர்கள் இதனை கவனிக்க)
siddha7
நாடியில் ஆண் பெண் வேறுபாடு:

ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடி பரிசோதனை செய்கிறோம்.

நாடி பரிசோதனையின் சிறப்புகள்:
-          நோயாளியால்தனதுநிலையைகூறமுடியாதநிலையிலும்அவர்தேகநிலையைஅறியலாம்.
-          நோயின்அடிப்படைகாரணத்தைக்கண்டறியலாம்.
(“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்ற குறளை இங்கு குறிப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.)
  • நோய்குணமாகுமாகுணமாகாதாஎன்பதைஆரம்பத்திலேயேகணித்துவிடலாம்.
அதாவது நாடிகள் தெளிவாக வாதநாடி, பித்தநாடி, கபநாடி என உணரப்படும். அதேபோல கலப்பு நாடிகளும் உணரப்படும்.
அதாவது,
வாத பித்தநாடி
வாத கபநாடி
பித்த வாதநாடி
பித்த கபநாடி
கப வாதநாடி
கப பித்தநாடி

என்று இதில் கப வாதமும், வாத கபமும் இருக்கும் நிலையில் நோய் குணமாவது கடினம்.

இப்படிப்பட்டவர்களுக்கு அதிகநாள் சிகிச்சை அளிக்க வேண்டிவரும்.

எத்தனை பேருக்கு நாடி பார்த்து பழகி மருத்துவராகிறோம்.

B.S.M.S படிப்பில்மூன்றாம்ஆண்டுமுதல்நோயாளிகளைசந்திப்போம்.
அடுத்த மூன்று ஆண்டுகள் மற்றும் ஒரு வருட பயிற்சி மருத்துவம், ஆக 4 ஆண்டுகள் நோயாளிகளை சந்திக்கிறோம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 100 நோயாளிகளுக்கு நாடி பரிசோதித்தால், எப்படியும் ஒரு இலட்சம் பேருக்காவது நாடி பார்த்துத்தான் ஒருவர் சித்த மருத்துவராக உருவாகிறார். M.D மூன்று வருடங்களையும் சேர்த்தால் 2 இலட்சம் பேரின் நாடி நிலைகளை அறிந்து பழகிதான் சித்த மருத்துவராகிறார். எனவே நாடி பரிசோதனை உயிர்ப்புள்ளதாகவே இருக்கிறது. இன்னும் சிறப்பாக வளரும்.
நாடியை சரியாக கணித்துவிட்டாலே போதும் பாதி சிகிச்சை முடிந்தது. அதன் பிறகு மருந்தை தீர்மானிப்பது சுலபம் மட்டுமல்ல. அதன் அடிப்படையில் கொடுக்கப்படும் மருந்து மிகச் சரியாக நோயை குணமாக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

Thursday, 1 October 2015

என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது?



சிறகு இணைய இதழைப் படித்து நிறைய பேர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறீர்கள். மூன்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சித்தமருத்துவம் படிக்க வைக்க விரும்புவதாகக் கூறினர். அதில் ஒருவரின் மகன் தற்போது எட்டாம் வகுப்பு படிக்கிறானாம்.
சித்த மருத்துவத்தைப் பற்றிய சரியான அறிமுகத்தை முதலில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ‘இலக்கோடு’ எழுத ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் சரியான முறையில் சென்றுகொண்டிருப்பதை இது காட்டுகிறது.
ஆனால் இதில் நிறைய பேர் மருத்துவம் எழுதும்படி கேட்டுக்கொண்டீர்கள். சித்த மருத்துவத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கமே தவிர நோய்களுக்கான மருத்துவம் எழுதுவதல்ல. ஆனாலும் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இடையிடையே மருத்துவமும் எழுதுவேன்.
இனி இந்தக் கட்டுரைப் பற்றி.
எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்றாலும், எந்தெந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது என்பதை இந்தக் கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
ஒன்று – எந்த நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவமே சிறந்தது எனக் கூறுவது.
இரண்டு – இந்த நோய்களுக்கு பெரும்பாலானவர்கள் ஆரம்பத்திலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி நோய் முற்றிய நிலையில் மாற்று மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருகின்றனர்.
இவ்வாறு நோய் முற்றிய நிலையில் வருவதை விட ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் இந்த நோய்களிலிருந்து முற்றிலுமாக விடுதலை அடைய முடியும்.
இனி நோய்களைப் பார்ப்போம்.
ennenna noigalukku1

தோல் நோய்கள் :

மிக அதிக எண்ணிக்கையில் நோய்கள் ஏற்படும் மிகவும் சிக்கலான உறுப்பு தோல். சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் மீண்டும் மீண்டும் ஏற்படுபவை தோல்நோய்கள். ஆனால் முறையாக சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் தோல் நோய்களிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

ஆஸ்துமா :

வாழ்நாள் முழுவதும் சிலருக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் இரைப்பு நோய் எனப்படும் ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது.

ஒவ்வாமை ( Allergy) :

புற சூழ்நிலைகளாலும் உணவுகளாலும் ஏற்படும் அனைத்துவிதமான ஒவ்வாமைகளுக்கும் சித்த மருத்துவமே சிறந்தது.

தலைவலிகள் :

பல்வேறு காரணங்களால் பலவிதமான தலைவலிகள் உண்டாகின்றன. உள்மருந்துகளோடு ‘நசியம்’ , ‘ பற்று’, ‘ சிர தாரை’ , ‘புகை’ போன்ற புற சிகிச்சை முறைகளையும் கொடுப்பதால் இப்படிப்பட்ட தீராத தலைவலிகளிலிருந்து முற்றிலும் விடுபட முடியும்.

பீனிசம் (sinusitis) :

‘சைனஸ்’ என பரவலாக அழைக்கப்படும் சைனஸைட்டிஸ் எனும் மூக்கடைப்பு நோய்க்கு சித்த மருத்துவத்தில் ‘பீனிசம்’ என்று பெயர். இந்நோய்க்கும் சித்த மருத்துவமே சிறந்தது.

நரம்பு சம்பந்தமான நோய்கள் :

நரம்புகளில் ஏற்படும் தளர்ச்சி, நரம்பு வலிகள் முதற்கொண்டு பக்கவாதம் வரை எல்லா நரம்பு நோய்களுக்கும் சித்த மருத்துவம் சிறந்தது.

தைராய்டு நோய்கள் :

நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் சித்த மழுத்துவமே சிறந்தது. உள் மருந்துகளுடன் சில யோகாசனங்களையும் செய்வதால் தைராய்டு பிரச்சினையிலிருந்து விடுபட முடியும்.

கழுத்து, இடுப்பு வலிகள்:

கழுத்து முதல் முதுகு வரை நீண்டிருக்கும் முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தம், தேய்மானம் மற்றும் வீக்கத்தில் ஏற்படும் வலிகளுக்கு உள் மருந்துகளுடன் ‘ஒற்றடம்’ , தொக்கணம்’ , ‘நவரக்கிழி’, ‘பற்று’ போன்ற சில புற சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்வதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மூட்டு வலிகள்:

சித்த மருத்துவம் மூட்டு வலிகளை பத்து விதமாக வகைப்படுத்தி அதற்கான சிகிச்சை முறைகளையும் வெவ்வேறாக கூறியுள்ளது. இனி இதிலும் உள்மருந்துகளுடன் ‘ பற்று’ , ‘ஒற்றடம்’, போன்ற புறசிகிச்சை முறைகளும் நல்ல பலனைத் தருகின்றன. ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவம் எடுத்துக்கொண்டால் வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும் தடுக்கலாம்.
சித்த மருத்துவத்தினால் மூட்டு அறுவை சிகிச்சையைத் தவிர்க்கலாம்.

இதய நோய்கள்:

ஒரு சித்த மருத்துவரை உங்களுடைய குடும்ப மருத்துவராக வைத்துக்கொண்டால் உங்களுக்கு இதய நோய்களே வராது என என்னால் உறுதியாக கூறமுடியும். அந்த அளவிற்கு இதயத்தை வலிமைப்படுத்தக்கூடியதும், பாதுகாக்கக்கூடியதுமான மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

குடல் புண்கள் (peptic ulcer):

சிலருக்கு தீராமல் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் ‘அல்சர்’ என பொதுவாக அழைக்கப்படும் குடல் புண்களுக்கு நிரந்தர தீர்வைத் தர முடியும்.

நீரிழிவு நோய் :

சர்க்கரை நோய் எனப்படும் இந்நோயை சித்த மருத்துவத்தில் ‘மதுமேகம்’ என அழைக்கிறோம். இந்நோய் பற்றி சுருக்கமாக கூறிவிட முடியாது. பேசுவதற்கு அத்தனை விசயங்கள் உள்ளன.
நீங்கள் நோயின் ஆரம்ப நிலையில் இருந்தாலும் சரி அல்லது ‘இன்சுலின்’ ஊசி போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, அதோடு கண்டிப்பாக சித்த மருத்துவமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு நோயினால் வரக்கூடிய மற்ற பாதிப்புகளான கண் பாதிப்பு, நரம்பு பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, இரத்த குழாய் பாதிப்பு, இதய பாதிப்பு போன்றவைகளை நிச்சயம் வராமல் தடுக்க முடியும். நீரிழிவுக்கு மருத்துவம் என்பது வெறுமனே இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பது மட்டுமல்ல.

இரத்தக் கொதிப்பு:

இந்நோய் வருவதற்கான காரணத்தை சித்த மருத்துவம் மட்டுமே விளக்குகிறது.
முழுமையான நிவாரணமும் உள்ளது.

சிறுநீரக நோய்கள் :

சிறுநீரக செயலிழப்பு (kidney failure)-க்கு சித்த மருத்துவமே சிறந்தது. சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதால் டயலைசிஸ் செய்வதை தவிர்க்கலாம். “டயலைசிஸ்தான் செய்யவேண்டும் வேறு வழியில்லை” என்று மருத்துவர்கள் கூறிய நிறைய நோயாளிகளை மருந்துகளினால் சரி செய்திருக்கிறேன்.
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களுக்கு அறுவை சிகிச்சை தேவையே இல்லாதது. மருந்தின் மூலமாகவே கற்களை கரைக்க முடியும்.

பித்தப்பை கற்கள் :

பித்தப்பையில் உள்ள கற்களை கரைப்பதற்கும் அறுவை சிகிச்சை தேவையில்லை. மருந்தின் மூலமாகவே கரைக்கலாம்.

மூலம் (piles) :

இந்நோயும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தக் கூடிய நோய்களில் ஒன்று. மருந்தின் மூலமாக மிக எளிதாக முற்றிலும் குணமாக்கலாம்.

கல்லீரல் நோய்கள் :

கல்லீரலும் ஒரு சிக்கலான உறுப்பு. மஞ்சள் காமாலை நோய்க்கு சித்த மருத்துவமே சிறந்தது. மேலும் கல்லீரலில் வருகின்ற பல்வேறு நோய்களுக்கும் சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது. இன்றைக்கு நிறைய அலோபதி மருத்துவர்களே கல்லீரல் நோய்களுக்கு சித்த மருந்துகளை பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர்.
arokkiyam5-2
பெண்களுக்கான நோய்கள் :

- கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்
- மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள்
- தைராய்டு பிரச்சினைகள்
- முடி உதிரல்
- முகப்பரு
- கால் பாத பித்த வெடிப்பு
- இரத்தக் குறைவு
- குழந்தை பேறின்மை
- உடல் பருமன்
- மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் கோபம் போன்ற மன பிரச்சினைகள்
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என உறுதியாக கூற முடியும்.
இன்று நிறைய அலோபதி மகளிர் மருத்துவர்களே (gynaecologists) இந்த பிரச்சினைகளுக்கு சித்த மருந்துகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர்.
arokkiyam6
குழந்தைகளுக்கான நோய்கள் :

- மூளை வளர்ச்சி குறைவு
- சிறு வயதில் ஏற்படும் ஆஸ்துமா
- சிறு வயதில் ஏற்படும் சர்க்கரை நோய்
(Juvenile diabetes)
- உடல் வளர்ச்சி குறைவு
- சரியாக சாப்பிடாமல் இருப்பது
- நினைவாற்றல் குறைவு (மறதி)
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது. தடுப்பு ஊசி போடுவது போல நோய்எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சில மருந்துகளை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.
“என்ன ஆச்சு.. குழந்தை அழுது…. …… வாட்டர் கொடு. உனக்கும் அதான் கொடுத்தேன்” என்பது ஒரு சித்தா மருந்து என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும?

உடல் பருமன் (Obesity):

குறிப்பாக இன்று இந்தப் பிரச்சனை நகரத்தில் வசிக்கும் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. உடலைக் குறைக்க உடற்பயிற்சி கூடங்களுக்கு செலவு செய்வது முதல் அறுவை சிகிச்சை வரை என்னென்னவோ செய்கிறார்கள். இதற்கு சித்த மருத்துவத்தில் பக்க விளைவை தராத நல்ல மருந்துகள் இதற்கு உள்ளன.

தலைமுடி பிரச்சினைகள் :

இளநரை, முடி உதிரல் போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.

வலிப்பு நோய்கள் :

காக்கை வலிப்பு என பொதுவாக அழைக்கப்படும் வலிப்பு நோய்களை சித்த மருத்துவத்தில் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஒரு நாளைக்கே பலமுறை வலிப்பு வந்து கொண்டிருந்த நோயாளியே குணமடைந்திருக்கிறார்.
arivu
ஆண்களுக்கான நோய்கள்:

- விந்தணு குறைபாடு
- ஆண்மைக்குறைவு
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வைத் தர முடியும்.
இவை தவிர சித்த மருத்துவ முறைகளை கடைபிடிப்பதன் மூலமாக ஆநேக நோய்களை வராமலே தடுக்க முடியும். அப்படிப்பட்ட நோய்களைப் பற்றி இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293