Thursday 7 April 2016

சித்த மருத்துவமும் மன நோய்களும் psychiatry and siddha medicine


                     

          சித்த மருத்துவமும் மன நோய்களும்

Psychic1சித்த மருத்துவத்தில் மன நோய்களுக்கான முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
பொதுவாக மன நோயாளிகள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை சரியாக இருப்பார்கள். மருந்தை இடையில் கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கும்.
Psychic2அப்படியானால் மன நோயாளிகள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?
இல்லை.
அப்படியானால் ஏன் பெரும்பாலானவர்களுக்கு மன நோய் முற்றிலுமாக குணமாவதில்லை?
சித்த மருத்துவத்தில் மன நோய்கள்:
Psychic6சித்த மருத்துவம் மன நோய்களை பல்வேறு விதமாக வகைப்படுத்துகிறது.
மன நோய்கள் ஒரு தனி பிரிவாக(Psychiatry) சித்த மருத்துவத்தில் உள்ளது. கிரிகை நோய்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன.
யூகி, அகத்தியர் போன்ற சித்த மருத்துவ அறிஞர்களின் நூல்கள் மன நோய்களைப் பற்றி விளக்குகின்றன.
சித்த மருத்துவத்தில் மன நோய்கள்:
-               கிரிகை
-               பிரமை
-               உன்மத்தம்
-               மதஅழிவு
என பலவிதமாக வகைப்படுத்தப்படுகின்றன.
மன நோய்களுக்கான அடிப்படை காரணங்கள்:
  1. மரபணு ரீதியாக வருபவை(Genetic)
  2. உடலில் இயங்கும் இயக்கங்களை வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் மாறுபாடுகளால் ஏற்படும் மன கோளாறுகள்.
  3. உடல் தாதுக்களான சாரம் (fluid part of all tissues), இரத்தம், தசை, எலும்பு, கொழுப்பு, நரம்பு, விந்து அல்லது அண்டம் ஆகிய ஏழு உடல் தாதுக்களில் ஏற்படும் பாதிப்பினால் உண்டாகும் மன நோய்கள்.
  4. நச்சுக்கள் மற்றும் மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள்(Toxins).
  5. புற காரணிகள் (Social factors).
மன நோய்களுக்கான சிகிச்சை:
நான்கு நிலைகளாக மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் போதுதான் முழுமையான விடுதலை கிடைக்கும்.
முதல் கட்ட சிகிச்சை:
Psychic9உடலில் மாறுபாடடைந்த இயக்கங்களான வாதம், பித்தம், கபம் என்பவைகளை சரியான அளவுக்கு கொண்டுவர வேண்டும்.
இதற்கு முதலில் நோயாளியின் நாடிநிலையை (Pulse reading) கணித்து அதற்குரிய சிகிச்சையை செய்ய வேண்டும்.
இரண்டாம் கட்ட சிகிச்சை:
பலவீனமடைந்த உடல் தாதுக்களை பலப்படுத்தும் விதத்தில் மருந்துகளையும், உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
மூன்றாம் கட்ட சிகிச்சை:
என்ன நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என கண்டறிந்த அதற்குரிய மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
இதில் உள் மருந்து மற்றும் புற மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நான்காம் கட்ட சிகிச்சை:
மேற்கண்ட மூன்றும் உடலை சரிசெய்வதற்கான சிகிச்சைகள். இதனை அடுத்து மனதை சரிசெய்வதற்காக சில பயிற்சிகளை கொடுக்க வேண்டும்.
இதற்கு அட்டாங்க யோகம் எனும் எட்டுவித பயிற்சிகள் உள்ளன.Psychic7
  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம் – யோகாசனம்
  4. பிரணாயாமம் – மூச்சுப்பயிற்சி
  5. பிரத்தியாகாரம்
  6. தாரணை
  7. தியானம் – Meditation
  8. சமாதி
போன்ற மனதை நிலைப்படுத்தும் பயிற்சிகள் உள்ளன. இவைகள் நோயின் தன்மைக்கும் நோயாளியின் தன்மைக்கும் ஏற்றவாறு பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆற்றுப்படுத்துதல் (Counseling):
Psychic3மேற்கண்ட நிலைகளின் நோயாளியின் உடலையும் மனதையும் சரிசெய்த பிறகு அவர்களின் பிரச்சனைகளுக்குத் தக்கவாறு அவர்களை ஆற்றுப்படுத்துவது அவசியம்.
இவ்வாறான படி நிலைகளில் மன நோய்களை சரிசெய்யும் போது முற்றிலுமாக அந்நோயிலிருந்து விடுபட முடியும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

Saturday 5 March 2016

முகப்பரு - Acne vulgaris



mugapparu8
முகப்பரு ( acne vulgaris ) :

பொதுவாக பதின் வயதில்(Teenage) கிட்டத்தட்ட எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை முகப்பரு. அதிலும் பதின் வயதின் கடைசி வருடங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விட அதிகமாகக் காணப்படும். ஆனால் சில பெண் பிள்ளைகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இலேசாக ஆரம்பித்து சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர் பிரச்சனையாக இருக்கும்.
mugapparu1சில பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் கூட இது ஒரு பிரச்சனையாக தொடர்வதுண்டு.
காட்சி ஊடகங்களில் (தொலைக்காட்சி, சினிமா) பணியாற்றும் பெண்களுக்கு முகப்பரு பெரிய தொல்லையாக இருந்து மன உளைச்சலைத் தரும்.
சிலருக்கு இதனால் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டு அவை மாறாமல் நிலையாக இருந்துவிடுவதும் உண்டு.
mugapparu4

முகப்பரு எங்கெல்லாம் வரலாம்?
இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பொதுவாக முகத்தில் வந்தாலும், தோள்பட்டை, மார்பின் மேல் பகுதி, முதுகு போன்ற இடங்களிலும் இது வருவதுண்டு. சிலருக்கு முதுகில் பிட்டம் (Buttocks) வரைகூட வருவதுண்டு.

முகப்பரு ஏன் வருகிறது?
mugapparu5முகப்பரு ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் தோலின் ஒன்றிரண்டு பகுதிகளை தெரிந்து கொள்வோம். தோல் என்பது உடலின் மிகப் பெரிய ஒரு உறுப்பு. மேலும் தோல் என்பது ஒரு சிக்கலான உறுப்பு. இது பல அடுக்குகளால் ஆனது மற்றும் பல சிறு சிறு உள் பகுதிகளை உடையது.
  • மயிர்க்கோளம் – Hair Follicle
இது தோலின் ஒரு பகுதி. மயிர் உற்பத்தியாகும் பகுதி.
  • சீபம் சுரப்பி – Sebaceous Gland
தோலுக்கும், மயிருக்கும் எண்ணெய் பசையை கொடுக்கும் ஒரு சுரப்பி. இது சுரக்கும் சுரப்பின் பெயர் ‘சீபம்’.
சரி, இனி முகப்பரு ஏன் ஏற்படுகிறது என பார்ப்போம்.

-               ‘சீபம்’ சுரப்பு காரணமா?

சீபம் சுரப்பி அதிகமாக சுரப்பதால் முகப்பரு வரலாம் எனவும் கூறப்படுகிறது. (Increased Sebum Secreting rate) அப்படியானால் ஏன் அதிகமாக சுரக்கிறது?

-               ஹார்மோன்கள் காரணமா?

குறிப்பாக ஆண்களுக்கான Androgenஹார்மோன் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பதின் வயதில் இந்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை துவங்குவதாகவும் கருதப்படுகிறது. அதே சமயம் பெண்களுக்கான ஹார்மோன்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
ஆனால் பலருக்கு சோதனை செய்து பார்த்ததில் ஹார்மோன்களின் அளவு சரியான அளவிலேயே இருந்திருக்கிறது. எனவே இதுவே காரணம் என இறுதியாகக் கூற முடியவில்லை.

மயிர் கோளத்தில் ஏற்படும் வீக்கம் காரணமா?

பல்வேறு காரணங்களால் மயிர்க்கோளத்தில் ஏற்படும் வீக்கம் முகப்பருவிற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. மயிர் துவாரங்கள் அடைபடும்போது முகப்பரு ஏற்படுகிறது.
பதின் வயதில் மயிர்க் கோளங்கள் முதிர்ச்சி அடைவதால் முகப்பரு தோன்றுகிறது(Hair follicle Maturation).

பரம்பரை காரணமா?

பரம்பரையும் ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் இதுவும் தீர்க்கமான முடிவல்ல.

மரபணு காரணமா?

முகப்பருவிற்கு மரபணு காரணமா என்ற ஆய்வகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

கிருமிகள் காரணமா?

Propionibacterium acnes போன்ற தொற்றுகளின் காரணமாகவும் ‘சீபம்’ வெளியேறும் துவாரங்களில் (Pilosebaceous duct) வீக்கம் ஏற்பட்டு முகப்பரு பிரச்சினை அதிகமாகிறது.

வேலை மற்றும் வாழ்க்கை முறை காரணமா?
எண்ணெய் பிசுக்கு முகத்தில் இருக்கும் படியான வேலை செய்வது மற்றும் அது மாதிரியான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருப்பதால் முகப்பரு வரலாம்.
மேலும் முகத்தில் வெயில் படாமலே இருப்பதும் முகப்பரு வருவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

மருந்துகள் காரணமா?
mugapparu8
-               Certicosteroids – ஸ்டீராய்டுகள்
-               AcTH
-               Testosterone (ஹார்மோன் மருந்துகள்)
-               Gonadotropins
-               Contraceptives (கருத்தடை மாத்திரைகள்)
-               Trimethadione (வலிப்பு மருந்து)
-               Iodides
-               Bromides
போன்ற மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவாக முகப்பரு வரலாம்.

White head, Black head என்றால் என்ன?
mugapparu2
முகத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் சிறு சிறு முள் போன்று தோன்றி இருக்கும். இதனை White head, Black head என்கிறோம்.
இவை சீபம் மற்றும் தோலின் Keratinஇரண்டும் கலந்து சீபம் வெளியேறும் துவாரங்களை அடைத்துக் கொள்வதால் உண்டாகின்றன. தோலின் நிறமிகளை Melanin ஆக்சிஜனேற்றம் அடைவதால் இவற்றில் சில கருப்பு நிறத்திலும் மற்றவை வெள்ளை நிறத்திலும் உள்ளன.
சரி இப்படி பல்வேறு காரணங்கள் முகப்பருவிற்கு கூறப்பட்டாலும் இன்னும் முகப்பருவிற்கான சரியான காரணம் முடிவாகக் கூறப்படவில்லை.
The Pathogenesis of Acne is incompletely understood என்கிறது நவீன மருத்துவம்.

சரிஇனி சித்த மருத்துவ விளக்கத்திற்கு வருவோம்
தோல்:
mugapparu5
உடலில் இயங்கும் மூன்று இயக்கங்களான வாதம், பித்தம், கபம் என்பதில் தோல் என்பது வாதம் செயல்படும் உறுப்பு. தோல் மற்றும் நரம்புகள் வாதம் இயங்கும் உறுப்புகளாக உள்ளன.
கரு உற்பத்தி ஆகும் போது மூன்று அடுக்குகளாக உற்பத்தியாகிறது. Endoderm, Mesoderm, Ectoderm
இதில் தோல் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை Ectoderm எனும் ஒரே அடுக்கிலிருந்து உருவாகின்றன.
எனவே நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தோல் முழுவதும் பிரதிபலிக்கும். எல்லா தோல் நோய்களோடும் மனதுக்கு மிகுந்த தொடர்பு உண்டு. எல்லா தோல் நோய்களிலும் மன பிரச்சனைகள் ஒரு காரணியாக இருக்கும்.
ஆக வாதத்தின் செயல்பாட்டில் ஏற்படும் சீர்கேடே தோல்நோய்களுக்குக் காரணம்.
முகப்பருவிற்கு காரணமும் அதுவே. எனவே முகப்பருவின் மர்மம் வாதத்தின் செயல்பாட்டில்தான் உள்ளது.

முகப்பரு சிகிச்சை:

வாதத்தை சமன் செய்வதற்காக முதலில் பேதிக்கு மருந்து கொடுத்து சிகிச்சையை துவங்க வேண்டும்.
பேதி செய்வித்தல் (Purgation) என்பது அனைவரும் நான்கு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது அவசியம். இது உடலின் எல்லா விதமான சுரப்பிகளின் செயல்பாட்டையும் சரிசெய்யும்.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் இல்லாமல் உடலை வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் உணவு மற்றும் பழக்க வழங்கங்களே காரணமாக அமைகிறது.
மலச்சிக்கலை சரிசெய்வதற்கு அநேக நல்ல சித்த மருந்துகள் உள்ளன என்றாலும் அவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையடன் சாப்பிடுவதே நல்லது.
-அகத்திக்கீரை(அடிக்கடி சாப்பிடக்கூடாது)
-அத்தி
- பச்சைக் காய்கறிகள்
- நெல்லிக்காய்
- கீரைகள் (மதியம் அவசியம்)
- பழங்கள்
- அன்னாசிப்பழம்
- பேரீச்சை
- சுரைக்காய்
- சோம்பு
- பீர்க்கங்காய்
- மக்காச்சோளம்
போன்றவை அதிகம் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கும்.
நிறைய நீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.


உள் மருந்து:
நோயின் தன்மை, நோயாளியின் தேக நிலை ஆகியவற்றை கணித்து முறையான சித்த உள் மருந்துகள் எடுத்துக் கொண்டால் முகப்பருவை சரிசெய்யலாம்.

வெளிப்பூச்சு:
அநேக பூச்சுகளை (Creams) போடுவது கூட முகப்பருவை அதிகரிக்கும்.
எண்ணெய்த் தன்மையை போக்கக்கூடியவதும் தோலில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கக் கூடியதுமான சித்த மருத்துவ மருந்துகள் உள்ளன.
அவற்றை காலையிலும் மாலையிலும் முகத்தில் பூசி, சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வருவதால் முகப்பரு மறையும்.

முகத்தில் வெயில்:
முகத்தில் வெயில் படாமலே இருக்கக்கூடாது. சிறிது நேரமாவது முகத்தில் வெயில் படுவது அவசியம். அதே போல முகத்தில் வியப்பதும் அவசியம்.

உடற்பயிற்சி:
சோம்பலான மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை இருந்தால் உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம்.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

Tuesday 1 March 2016

இரத்தக் கொதிப்பு - hypertension

                 
                         இரத்தக் கொதிப்பு - Hypertension

Kaplan’s clinical hypertension என்றொரு புத்தகம். நவீன மருத்துவத்தில் இரத்தக் கொதிப்பு பற்றி எழுதப்பட்ட ஒரு முழுமையான புத்தகம் என இதை கூறமுடியும்.
இந்த நூல் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று விளக்கும்போது, “பல கோடி டாலர்கள் செலவு செய்தும், இன்னும் இரத்தக் கொதிப்பு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான முழுமையான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை” என்கிறது.
Blood pressure measuring studio shotஇது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஏன் நவீன மருத்துவத்தில் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை?
ஏனென்றால் எந்த ஒரு நோய்க்கும் ஒரு கிருமியோ அல்லது ஏதேனும் வேதிப்பொருளோ காரணமாக இருக்க வேண்டும் என்று நுண்ணோக்கியின் மூலமோ அல்லது மருத்துவ ஆய்வகத்திலோ (Medical Laboratory) பகுத்துப் பார்க்கும் போக்கு உடையது நவீன மருத்துவம்.
kothikkummun2ஆனால் உடலில் இவை மட்டுமல்லாது கண்ணுக்குத் தெரியாத வாயுக்கள், வெப்பம், குளிர்ச்சி போன்றவையும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவற்றை நுண்ணோக்கி கொண்டோ ஆய்வகத்திலோ பரிசோதித்து கணக்கிட முடியாது. இவற்றையே வாதம், பித்தம், கபம் என்று சித்த மருத்துவம் விளக்குகிறது.
இங்கு நான் விளக்குகின்ற இரத்தக் கொதிப்பு அல்லது அதி இரத்த அழுத்தம் என்பது ஒரு பித்த நோய்.
உடலை சாரம்(திசுக்களின் திரவப்பகுதி), இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, சுக்கில சுரோணிதம்(ஆண்களுக்கு விந்து, பெண்களுக்கு அண்டம்) என ஏழு தாதுக்களாக சித்த மருத்துவ இயங்கியல் (Siddha Physiology) பிரிக்கிறது.
இதில் இரத்தம் எனும் தாதுவில் பித்தத்தின் செயல்பாடு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதுதான் இரத்தக் கொதிப்புக்கு சித்த மருத்துவம் கொடுக்கும் நோய்நாடல் விளக்கம். எனவேதான் சித்த மருத்துவம் இரத்த கொதிப்பு நோயை ‘இரத்த பித்தம்’ என அழைக்கிறது. எனவே பித்தத்தை சரிசெய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சரிசெய்ய முடியும்.
இரத்த கொதிப்பு என்றால் என்ன?
நல்ல உடல் நிலையில் உள்ள ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80mmHg என இருக்க வேண்டும்.
இது 130-139/85-89mm Hg என இருப்பது சற்று உயர் இரத்த அழுத்தம் ஆனாலும் இதனால் பாதிப்பு இல்லாதவரை இதையும் சரியான அளவு என்றே எடுத்துக் கொள்ளலாம்.
இது 140-159/90-99mm Hg என்று இருந்தால் முதல் நிலை இரத்தக் கொதிப்பு (mm Hg) (Mild).
இது 160-179/100-109/ mm Hg என இருப்பது இரண்டாம் நிலை இரத்தக் கொதிப்பு(Moderate).
இது ≥180 /≥110mm Hg இருப்பது மூன்றாம் நிலை இரத்தக் கொதிப்பு (Severe).
இரத்தக் கொதிப்பு ஏன் வருகிறது:
  1. உணவு
  2. மனம்
  3. செயல்
ஆகிய மூன்றில் ஏற்படும் தவறுகள் காரணமாக இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இந்நோய் ஏற்படுகிறது.
உணவில், உப்பு, புளி, காரம் ஆகிய மூன்று சுவைகளை அதிகமாக உண்டுவருவது,
மனதின் அமைதியை கெடுக்கும் வகையிலான சூழ்நிலையில் பிணைபட்டு இருப்பது,
உடலில் பித்தத்தை அதிகரிக்கும் விதமான செயல்களை செய்து வருவது.
புகைப்பிடிப்பது:
images-20
இரத்தக் கொதிப்பு உருவாவதற்கு மிக முக்கியமான காரணியாக புகைப்பிடிக்கும் பழக்கும் உள்ளது.
  • அதிக கொழுப்புள்ள உணவு
kothikkummun1
பால், நெய், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களும், இறைச்சியின் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்களில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இவையும் இரத்தக் கொதிப்பிற்கு காரணிகளாக உள்ளன.
மருத்துவம்:
இரத்தக் கொதிப்பு திடீரென ஓரிரு நாளில் வந்துவிடுகின்ற நோயல்ல, பெரும்பாலானோருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்ததே தெரியாத அளவுக்கு மிகவும் மெதுவாக துவங்கும்.
இதற்கு உடலில் இயங்கும் சக்திகளான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் வைத்துக்கொள்வது அவசியம். இதற்கு பின்வரும் சிகிச்சைகளை அவற்றிக்குரிய காலக்கெடுவின்படி செய்து வருவது அவசியம்.
நசியம் – நாசியில் மருந்து இடுவது
வமனம் – வாந்தி செய்வித்தல்
பேதி – பேதி செய்வித்தல்
மேலே கூறிய மூன்றையும் சித்த மருத்துவரின் ஆலோசனையில் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருவது அவசியம்.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள்:
  1. முறையான உள் மருந்துகள்
  2. யோகாசனம்
போன்றவற்றை முறையாக எடுத்து வந்தால் இரத்தக் கொதிப்பை முற்றிலும் சரிசெய்ய முடியும்.
மருதம்பட்டை
முசுமுசுக்கை
நெல்லிக்காய்
சீரகம்
வெண்தாமரை
கரிசாலை
போன்ற மூலிகைகள் சேர்ந்த மருந்துகளும்,
சிருங்கி பற்பம்
அயச் செந்தூரம்
நாக வங்கம்
சிலாசத்து
பவளம்
சேர்ந்த மருந்துகளும் முறையான நோய் கணிப்பு மற்றும் தேக கணிப்புடன் கொடுக்கப்பட்டால் நல்ல பலனைத் தரும்.
இரத்தக் கொதிப்பிற்கான யோகாசனங்கள்:
             thandaasanam
        தண்டாசனம்
Vajraasanam
        வஜ்ராசனம்
pujangaasanam
            புஜங்காசனம்
sethubandha sangasanam
  சேதுபந்த சர்வாங்கசனம்
savaasanam
            சவாசனம்
danuraashnam
         தனுராசனம்
ஒரு அறிமுகத்திற்காகத்தான் இவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டேன். ஆனால் ஆசனங்களை சுயமாக செய்ய முயற்சிக்கக் கூடாது.
B.S.M.S அல்லது B.N.Y.S படித்த மருத்துவரிடம் சென்று முறையாக கற்று செய்வதே நல்லது.
பின் குறிப்பு:
சிறுநீரக நோய்கள், நொதி (Hormone) ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற வேறு சில நோய்களின் காரணமாக இரத்த அழுத்தம் ஏற்படலாம். இவைகளுக்கு அந்த நோய்களுக்கான சிகிச்சையின் மூலம் நோயை அணுக வேண்டும்.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293