Wednesday 30 September 2015

மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே

Dr.Jeromeஇன்றும்கூட நம்நாடு முழு படிப்பறிவை எட்டிய நாடு அல்ல. எல்லாத் துறைகளிலும் அறியாமை நமக்கு இருந்தாலும் கூட, மருத்துவ துறையில் பொதுமக்களுக்கு தற்குறித்தனம் அதிகமாகவே உள்ளது.
பிள்ளைகள் 30 வயது வரும் வரை கூட அவர்களை பெற்றோர் தங்கள் கட்டுப்பாட்டில்தான் வளர்க்கின்றனர். மருத்துவத்தில் கூட ஏதாவது தீவிர நோய் நிலையில்தான் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார்களே தவிர மற்றபடி ஏதாவது உடல் பிரச்சனை வந்தால், “ பெரியப்பா சொன்னார்…., சித்தி சொன்னார்… “ என்று மருத்துவம் ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்தவரை பெரியப்பாதான் பொது மருத்துவர், அவர் ஒரு சிறப்பு மருத்துவரைப் பரிந்துரைப்பார். அந்த சிறப்பு மருத்துவர் யார் தெரியுமா? ஏற்கனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒன்றுவிட்ட சித்திதான் அந்த சிறப்பு மருத்துவர். இப்படியாக நோய் முற்றும் வரை சிகிச்சை தொடரும். இவர்களைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட மருந்து உள்ளது, அதை எடுத்துக் கொண்டால் அந்த நோய் குணமாகிவிடும் என நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. நோய் வேறு, நோயாளி வேறு.
நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது மிகவும் அடிப்படையான ஒன்று. அதை விளக்குவதற்கே இந்தக் கட்டுரை.
ஒரு நோயை உதாரணமாக வைத்து நோய்க்கும் நோயாளிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறேன்.
sidhdha5

கல்லடைப்பு அதாவது சிறுநீரக கல் என்று நோயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். சிறுநீரகக் கல்லுக்கு ‘இதுதான் மருந்து’ என உடனே முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமானால் மருத்துவரே தேவையில்லையே. வலி வந்தவுடன் ஒரு பரிசோதனை மையத்தில் நுண்கதிர் சோதனை (Scan -ஸ்கேன்) செய்துவிட்டு, சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என தெரிந்தவுடன் ‘அந்த மருந்தை’ சாப்பிட்டு கல்லை கரைத்து விடலாமே.
“அப்படியெல்லாம் மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது அது தவறு” என நீங்கள் மனதில் நினைப்பது சரி. ஆனால் இப்படி ஒரு அரை வேக்காட்டுத்தனம் மக்களிடையே பரவி வருகிறது என்பது உண்மை.
இப்படிப்பட்ட தவறான, ஆபத்தான தகவல்களை பரப்பும் வேலையை ஊடகங்களே செய்து வருகின்றன. “சிறுநீரகக் கல்லா…. கவலை வேண்டாம்… முள்ளங்கி இரண்டு எடுத்து…” என மருத்துவக் குறிப்பு எழுதுவதை சிலர் பொழுதுபோக்காகவே கொண்டுள்ளனர். ஒரு சில தொலைக்காட்சிகளில் கூட இப்படிப்பட்ட கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
“இதையும் சிலர் கடைப்பிடித்துவிட்டு, சித்த மருந்து சாப்பிட்டேன், சரியாகவில்லை பிறகு அறுவை சிகிச்சை செய்து கல்லை எடுத்தனர்.” என அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
சரி, இப்படி மருத்துவம் செய்து கொள்பவர்களில் ஒரு சிலருக்கு கல் கரைகிறது, சிலருக்கு கரைவதில்லை ஏன் அப்படி என நீங்கள் கேட்கலாம். இங்குதான் நோய் வேறு, நோயாளி வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இங்கு நோய் என்பது  – சிறுநீரக கல்
நோயாளிகள் – வாத உடலினர்
-பித்த உடலினர்
- கப உடலினர்
ஆக நோய் ஒன்று நோயாளிகள் மூன்று விதம்
(இது போல இன்னொரு விதமான கல்லும் உருவாகும். அதைப் பற்றி இந்த நோய்க்கான கட்டுரையில் எழுதுவேன்)
sidhdha4இதில் அவர்கள் உடல்நிலை மட்டுமல்ல, அதனால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கல்லும் மூன்று விதமாக உருவாகும்.

வாத உடலினருக்கு ஒரு வித கல்லும், பித்த உடலினருக்கு வேறு வித கல்லும், கப உடலினருக்கு வேறுவித கல்லும் உருவாகின்றன. இந்த மூன்று பேருக்கும் ஒரே விதமான மருந்தைக் கொடுத்தால் ஒரு சிலருக்கு குணமாகும், ஒரு சிலருக்கு குணமாகாது. இந்த வேறுபாட்டை மருத்துவராலேயே கணிக்க முடியும். இந்த நோய் கணிப்பு (Diagnosis) பத்திரிக்கையில் மருத்துவக் குறிப்பு எழுதும், அல்லது தொலைக்காட்சியில் பாட்டி வைத்தியம் கூறும் அரை வேக்காடுகளுக்குத் தெரியாது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் படிப்பவர்களும், பார்ப்பவர்களுமே.
ஒரு மருத்துவக் குறிப்பைப் படிக்கும் போது அதை எழுதியது யார்? அவருக்கு அந்த துறை சார்ந்த தகுதி இருக்கின்றதா? என தெரிந்து கொள்ள வேண்டும்.
sidhdha2மீண்டும் சிறுநீரகக் கல்லுக்கு வருவோம். வாத சிறுநீரக கல்லில் மேற்புறம் முற்கள் போன்று இருக்கும். இது கருப்பாக இருக்கும் இவர்களுக்கு சிறுநீர் பையில் வலி இருக்கும். இவர்களுக்கு ஒரு வித முறையில் சிகிச்சை ஆரம்பித்து மருந்து கொடுக்க வேண்டும்.
sidhdha1பித்த சிறுநீரகக் கல் சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இவர்களுக்கு சிறுநீர்ப்பையில் கொதிப்பும் எரிச்சலும் இருக்கும்.இவர்களுக்கு ஒரு வித முறையில் சிகிச்சை கொடுக்க வேண்டும்.
sidhdha3கப சிறுநீரகக் கல் வெள்ளையாக வழவழப்பாக இருக்கும், சிறுநீர்ப்பை குளிச்சியாக இருக்கும். அந்த இடத்தில் ஊசி குத்துவது போல வலி இருக்கும்.
இந்த மூன்று வித, கற்களின் வேதியியல் மூலக் கூறுகளும் (Chemical composition) ஒன்றுக்கொன்று வேறுபடும். இதனால்தான் எல்லோருக்கும் அந்த பொது மருந்து ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை.
பற்பம், சுண்ணம், குடிநீர் என பல விதமான மருந்துகளில் எதை யாருக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என மருத்துவருக்குத் தெரியும்.
(ஒரு உதாரணத்திற்காகத்தான் சிறுநீரகக் கல்லை இங்கே எழுதினேனே தவிர இந்த நோயைப் பற்றிய கட்டுரை அல்ல இது)
எனவே எந்த நோயையும் குணமாக்குவதற்கு அந்த நோயாளியின் உடல் நிலைமை முதலில் தெரிந்து பிறகு மருத்துவம் செய்ய வேண்டும்.
வெறும் பரிசோதனை முடிவுகளை (Scan, Blood test, Xray) மட்டும் வைத்து சிகிச்சை செய்து விட முடியாது, இதைத்தான்

“நோய் நாடி, நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்”
என்றார் நம் பாட்டன்.
ஆக, மருத்துவம் செய்ய வேண்டியது நோய்க்கு அல்ல, நோயாளிக்கே.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

No comments:

Post a Comment